நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? – 3

ஆறு  மாதங்களுக்கு பிறகு தொடரைத் தொடர்வதால் மறந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதனால் பதிவிற்குள் போகும் முன் இத்தொடரின் முந்திய பகுதிகளை பார்த்துவிட்டு வாருங்கள்.

நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? – 1
நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? – 2  

Content is a King: 

நம்முடைய ப்ளாக்கை பிரபலமாக்கும் காரணிகளில் முக்கியமானதும், முதன்மையானதும் நம்முடைய பதிவுகளே! அவைகள் தான் வாசகர்களை நம்முடைய வலைப்பூவில் ஒன்ற வைப்பதும், திரும்பவும் வரவழைப்பதுமாகும். ஆங்கிலத்தில் “Content is a King” என்று சொல்வார்கள்.

பதிவெழுத சில டிப்ஸ்:

பொதுவாக பதிவெழுதுவதற்கு எந்தவிதமான வரைமுறைகளும் இல்லை. ஆனால், எது மாதிரியான பதிவுகளுக்கு வரவேற்பு அதிகம் என்று என்னுடைய கண்ணோட்டத்தில் இங்கு குறிப்பிடுகின்றேன்.

1. புதிய செய்திகள் (Breaking News)

2. நகைச்சுவை பதிவுகள் ( இதற்கு “மொக்கை” என்று இன்னொரு பெயரும் உண்டு)

3. தொழில்நுட்ப பதிவுகள் (இணையம், கணினி தொடர்பான பதிவுகள்)

4. டாப் டென் போன்ற பட்டியல்கள்

5. சினிமா செய்திகள் (திரை விமர்சனம்)

6. விவாதப் பதிவுகள்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், உங்கள் பதிவுகள் பிரத்யேகமானதாக (Unique Post) இருப்பது நலம்.முடிந்தவரை எழுத்துப் பிழைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.இறைவன்  நாடினால், அடுத்த பகுதியில் நாம் பார்க்க இருப்பது,

“Killer Articles”
இதையும் படிங்க:  பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்!

14 thoughts on “நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? – 3”

  1. //சி.பி.செந்தில்குமார் said…

    வம்புச்சண்டை பற்றி ஒண்ணூம் இல்லையெ? அதுதானே இப்போ செம ஹிட் ஆகுது?
    //

    அதைத்தான் நண்பா "விவாதப் பதிவுகள்" என்று எழுதியுள்ளேன். தங்கள் வருகைக்கு நன்றி நண்பா!

  2. பாஸ் கொஞ்சம் விரிவா எழுதுங்க. நாலு வரி எழுதுறதுக்கு எதுக்கு பிளாக்கர்

  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அப்துல் பாசித்.

    பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கள்…
    அதில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள்…

    —கேள்விப்பட்டிருக்கிறோம்…!

    //நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?//–என்றே… ஒரு பதிவுத்தொடர் எழுதி பிரபலமாவது என்பது… ம்ம்ம்… நீங்க கலக்குங்க… சகோ..!

  4. //விநாயகம் said…

    பாஸ் கொஞ்சம் விரிவா எழுதுங்க. நாலு வரி எழுதுறதுக்கு எதுக்கு பிளாக்கர்
    //

    மன்னிக்கவும் நண்பா! கொஞ்சம் வறட்சி…! 🙂

    தங்கள் வருகைக்கு நன்றி!

  5. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said…

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அப்துல் பாசித்.

    பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கள்…
    அதில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள்…

    —கேள்விப்பட்டிருக்கிறோம்…!

    //நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?//–என்றே… ஒரு பதிவுத்தொடர் எழுதி பிரபலமாவது என்பது… ம்ம்ம்… நீங்க கலக்குங்க… சகோ..!
    //

    வ அலைக்கும் ஸலாம் சகோ.! "ஒரே நாளில் பணக்காரனாவது எப்படி?"னு புத்தகம் எழுதியே பணக்காரனாகும் டெக்னிக்… 🙂

    தங்கள் வருகைக்கு நன்றி!

  6. //ஆர்.கே.சதீஷ்குமார் said…

    m..ரொம்ப சுருக்கமா தெளிவா சொல்லிட்டீங்க…
    //

    நன்றி நண்பா!

  7. //மனசாட்சியே நண்பன் said…

    பல விஷயங்களை தெரிந்து கொள்கிறேன் நன்றி சகோ
    //

    நன்றி சகோ!